Hi am Mohamed i would like to get details on veta spoken english through tamil pdf free download ..My friend Justin said veta spoken english through tamil pdf free download will be available here and now i am living at karur......... and i last studied in the college and now am doing work....i need help on ......etc
Posts: 1,114
Threads: 699
Joined: Sep 2016
இந்த “ஆங்கிலம்” வலைத்தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். நீங்கள் பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, புத்தகங்களிலோ ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல் இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு சற்று வேறுப்பட்டிருப்பதை அவதானிப்பீர்கள்.
என்ன வேறுப்பாடு?
எடுத்துக்காட்டாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இப்பாடத்திட்டத்தில் அவ்வாறு அல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏனிந்த வேறுப்பாடு?
எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என தமிழில் வாக்கியங்கள் அமைகின்றன.
எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் என ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைகின்றன.
இந்த ஆங்கில நடைக்கும் தமிழ் நடைக்கும் இடையேயான வேறுபாடுதான் பலருக்கு ஆங்கிலத்தை வாசித்து புரிந்துக்கொள்வதில் சிரமமாகிவிடுகிறது. எனவே இந்த வேறுபாட்டை எளிதாக புரிந்துக்கொண்டு கற்கும் வகையில் "எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள்" என ஆங்கில நடைக்கு ஏற்பவே பாடங்களின் வாக்கியங்கள் தமிழாக்கம் செய்யப்படுகின்றது.
ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பதால் பயன் என்ன?
I – நான்
went – போனேன்
to school - பாடசாலை + க்கு
I + went + to school
நான் + போனேன் + பாடசாலைக்கு.
I + went + to school + yesterday
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று.
I + went + to school + yesterday + with my friends.
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று + எனது நண்பர்களுடன்
"நான் எனது நண்பர்களுடன் நேற்று பாடசாலைக்கு போனேன்." என தமிழ் நடைக்கு ஏற்ப எழுதி கற்பிப்பதை விட, ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிப்பதில், ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் சொற்களையும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். அத்துடன் ஆங்கில வாக்கியங்களை நீட்டி அமைப்பது எவ்வாறு என்பதனையும் எளிதாகப் புரிந்துக்கொள்ளவும் உதவும்.
தவிர இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. அநேகமாக வேற்று ஒரு மொழியை தமது தாய் மொழிக்கு மொழிமாற்றுவோர், தமது தாய்மொழி நடைக்கேற்பவே மொழி மாற்ற விரும்புவர். அதுவே அம்மொழியின் சிறப்பிற்கும், குறிப்பிட்ட மொழியினரின் புரிதலுக்கும் வழிவகுக்கும் என்பது உண்மை. அத்துடன் தத்தமது மொழியின் தனித்துவத் தன்மையை பேணிக் காக்கவும், மொழியின் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் உணர்த்தவும் உதவும். அதனடிப்படையில் தான் தமிழ் கலைச்சொல்லாக்கப் பணிகளும் நடைப்பெறுகின்றன.
இன்றையத் தமிழ் இணைய உலகில் பரவலாகப் பயன்படும் தமிழ் கலைச்சொற்களை சற்று பாருங்கள்.
Bus - பாட்டை
Home - முகப்பு
Home page - முகப்புப் பக்கம்
இவை நம் எல்லோரதும் மனதில் பதிந்து, இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் தரும் சொற்களாக நிலைப்பெற்றவைகளாகும். இவை ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிறப்புறக் கற்று தெளிந்தவர்களால் இடம், பொருள், ஏவல் நிலையறிந்து உருவாக்கப்படும் கலைச்சொற்களாகும்.
ஆனால் இவை ஆங்கிலம் கற்க முனையும் ஒரு ஆரம்ப நிலை ஆர்வலருக்கு அல்லது மாணவருக்கு குழப்பத்தைத் தரலாம். அதனால் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களை கற்க முனையும் முன், சாதாரண ஆங்கிலப் பேச்சு வழக்கில் பயன்படும் சொற்களிற்கு இணையான தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளல் பயன்மிக்கது.
இவற்றை மனதில் கொண்டே நாம், ஆங்கில நடைக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு செய்துவருகின்றோம். எனவே:
Bus - பேருந்து
Home - வீடு, இல்லம், மனை
என முதலில் கற்றுக்கொள்வோம். அதன் பின் தமிழ் கலைச்சொல்லாக்கச் சொற்களை கற்றுக்கொள்ளலாம்.
உலகத் தமிழர் பேச்சு வழக்கு
தவிர உலகத் தமிழர்களான நாம், எமது தமிழ் பேச்சு வழக்கில் சொற்கள் உச்சரிப்புகள் போன்றன இலங்கை இந்தியா என நாடு ரீதியாகவும், நாட்டுக்குள் வட்டார ரீதியாகவும் வேறுப்பாடுகளை கொண்டுள்ளன.
உதாரணம்:
Did you go to market?
நீ சந்தைக்கு போனாயா? - எழுத்துத் தமிழ் வழக்கு
நீ சந்தைக்கு போனியா? - தமிழக/ கொழும்பு பேச்சு வழக்கு
சந்தைக்கு போன நீயா? - யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
நீ மார்க்கெட் போனாயா? - ஆங்கிலம் இடைச்செருகி பேசும் "தமிங்கில" வழக்கு
எனவே ஒவ்வொரு வட்டார வழக்குக்கும் ஏற்ப, ஆங்கிலம் கற்பிப்பது என்பதும் பொருத்தப்பாடாக இல்லை.
Did you go to market?
நீ போனாயா சந்தைக்கு?
என ஆங்கில நடைக்கேற்ப தமிழ்ச் சொற்களை அமைத்து, வாக்கியங்களாக பயிற்றுவிப்பதே இலகுவாக ஆங்கிலம் கற்க உதவும் என நாம் நம்புகின்றோம். மேலும் முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தை சரியாக விளங்கிக் கற்றால், காலப்போக்கில் அவரவர் தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்ப தாமாகவே விளங்கிக் கொள்வர்.
எமது ஆங்கில வகுப்பில்
எமது ஆங்கில வகுப்பிற்கு வருகைத் தரும் மாணவர்கள் சிலரிடமும் இவ்வாறானதொரு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. சிலர் தமிழை பிழையாக எழுதி கற்பிப்பதாகவும், செயற்கையான மொழிமாற்றமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் காலப்போக்கில் அவர்களாலேயே ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கற்பதற்கு இப்பாடத்திட்டம் மிக இலகுவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
எனவே அதே முறைமையையே இந்த "ஆங்கிலம்" வலைப்பதிவிலும் தொடர்கின்றோம். இது எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.
தாய்மொழி தமிழும் ஆங்கிலமும்
இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவோரே அதிகம். இந்த ஆங்கில மோகம் தாய் மொழி தமிழை சிதைத்து விடுமோ என்று பலர் அச்சம் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.
"பாய்ந்தோடும் நதிக்கு பள்ளம் மேடு தடையாக இருப்பதில்லை." என்பது போல் எத்தனை அணைக் கட்டினாலும் நதி நீர் நிரம்பி பள்ளம் நோக்கி பாய்ந்தோடவே செய்யும். அதேப்போல் இன்றைய தொழில்நுட்ப உலகின் தொழில் தகமைகளுக்காகவும், அவை சார்ந்த கற்கை நெறிகளுக்காகவும், பன்னாட்டு வணிகத் தொடர்பாடல்களுக்காகவும் வளர்ந்து வரும் இளைய சமுதாயம் ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதை எவரும் நிறுத்திவிட முடியாது. ஆங்கில மொழி அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில் அதன் அவசியம் உணர்ந்தவர்கள் எப்படியாயினும் கற்க முனைகின்றனர். அதனை எவரும் தடுக்க முடியாது. தடுக்க முனைவதும் எமது சமுதாயத்தை நாமே வளரவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டையாகவே அமையும். உலகின் ஏனைய மொழிகள் போன்றல்லாமல் ஆங்கில மொழிக்கென்று ஒரு மதிப்பும் காலத்தின் அவசியத் தேவையும் இருக்கின்றது என்பதை எவரும் மறுத்திட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் இன்றைய உலகின் தமிழினத்தின் தலை நிமிர்விற்கு ஆங்கில மொழியறிவு முதன்மையானது என்பதில் இருவேறு கருத்து என்னிடமில்லை.
அதேவேளை ஆங்கிலம் கற்று நிமிரும் எம்மினத்தோர், தாய்மொழியாம் நம் தமிழ் மொழி வளர்ப்பிற்கும் தம்மால் இயன்ற பணியை ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் குவிந்து கிடக்கும் அனைத்து அறிவியல் வளங்களையும் தமிழில் படைக்கவேண்டும். அதுவே தமிழின் வளர்ச்சிக்கான வழியுமாக இருக்கும்.
தமிழ் வழி ஆங்கிலம்
"முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம்" கற்பதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?
கூடுமான வரையில் ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் அர்த்தங்களை விளங்கிக்கொள்ள முடியும்.
பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று தெரியாமல் பேசுவதை விட, தாம் பேசுவது தமிழ் அல்லது ஆங்கிலம் என்றாவது விளங்கிப் பேச உதவும்.
இன்றைய புலம் பெயர் நாடுகளில் ஆங்கில வழி கல்வி கற்போரும், உள்ளூரில் ஆங்கில வழி கல்வி கற்போரும், ஆங்கில மொழியில் ஆளுமையுள்ளவர்களானாலும் அவர்களிடம் இருந்து தமிழ் மொழிக்கான பணியை எவ்வளவு எதிர்ப்பார்க்க முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. (விதிவிலக்காக ஒரு சிலர் உதயமாகலாம்) தமிழ் மட்டுமே கற்றவரிடம் இருந்தும் பெரிதாக எதனையும் எதிர்ப்பார்க்க முடியாது. அவரோ தனது சுய அறிவு வளர்ச்சிக்கும்; வேற்றுமொழி கற்றோரின் மொழி பெயர்ப்புக்களை நம்பியவராகவே இருப்பார்.
ஆனால் தமிழும் ஆங்கிலமும் கற்று தெளிந்தோரால் எளிதாக பல பணிகளை தமிழுக்கு செய்திட முடியும். ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற தொழில் நுட்பத் தகவல்களை தமிழாக்கம் செய்தாலே மாபெரும் புரட்சியை ஏற்படுத்திடலாம். இதனை தமிழ் வழி ஆங்கிலம் கற்போர் எளிதாக செய்திடலாம்.
ஆங்கிலம் கற்பித்தலுக்கான முதன்மை தகமை
தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதன்மை தகமை எதுவாக இருக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் இலக்கணத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது முதன்மை அல்லது சிறப்பு தகமையாக கொள்ளபடவேண்டும். கவலைக்குறிய விடயம் என்னவென்றால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்கு தாய் மொழி தமிழ் இலக்கணம் சரியாகத் தெரியாது என்பதே. பிறகு எப்படி ஆங்கில மொழியின் இலக்கணக் கூறுகளை தமிழ் இலக்கணக் கூறுகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்த முடியும்? மாணவர்கள் எப்படி எளிதாக கற்றுக்கொள்ள முடியும்? அநேகமாக ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டிராத ஆங்கில ஆசிரியர்கள் இருமொழி கற்கை வழியூடாகவே (Bilingual) ஆங்கிலம் கற்பிக்கின்றனர். அவ்வாறு கற்பிப்போரின் பிரதான தகமை குறிப்பிட்ட இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக உலகின் பலநாடுகளிலும் கோரப்படும் தகமையாகும். அதாவது இருமொழி வழியில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்ட இரண்டு மொழி இலக்கணத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் மட்டும் ஏனோ தமிழ் இலக்கண அறிவை காணமுடிவதில்லை. இது வரவேற்கத்தக்க ஒரு விடயம் அல்ல.
ஒரு மொழி இலக்கணத்தை இன்னொரு மொழியில் கற்பிக்க, குறிப்பிட்ட இரண்டு மொழிகளின் இலக்கண அறிவையும், இரண்டு மொழிகளுக்கிடையேயான இலக்கண வேறுபாடுகளை கற்றவராகவும், அவற்றை எளிதாக மாணவர்களுக்கு எடுத்துரைப்பவராகவும் கற்பிப்பவர் இருக்க வேண்டும். அப்போது தான் கற்கும் மாணவர்களால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
ஆங்கில வழி கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் என்றாலும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறியாதிருக்கும் வரை அறியாமையே மேலோங்கி நிற்கும். உள்ளூரில் ஆங்கில வழிக் கல்வியில் உயர் தரம் கற்றோரும், ஆங்கிலம் பேசுவதில் சிரமப்படுகின்றனர் என்றால் இதுவே பிரதானக் காரணமாகும். இதற்கான ஒரே தீர்வு முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பது தான்.
ஆங்கிலம் கற்பிப்போர் இருமொழியிலும் சிறப்புற்றவர்களாக இருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் ஆங்கிலம் கற்கும் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் ஆளுமையையும் தமிழ் மொழியின் சிறப்பையும் கற்றுப் பெறுவர். அவ்வாறானவர்களிடமே தமிழ் பணி புரியும் ஆர்வமும் ஏற்படும்.
ஆங்கில உச்சரிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் தாய் மொழி ஆங்கிலேயரைப் பின்பற்றலாம்.
தமிங்கிலம் தவிர்ப்பதற்கு
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதனால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறிந்துக்கொள்வது மட்டுமன்றி, தமிங்கிலத்தை தவிர்ப்பதற்கும் உதவும். இதுவே பரந்துப்பட்ட அளவில் அரசக் கல்வித்திட்டமாக பரிணமிக்குமானால் தமிங்கில வழக்கை காலப்போக்கில் ஒழித்துக்கட்டடும் வாய்ப்பாகவும் ஆகலாம்.